Sunday 23 August 2015

உற்றுக் கவனியுங்கள்

வாள் முனைக்கு
முன்னாலே
சந்தோசங்களை
ஏன் நீட்டுகின்றோம்!
சின்ன சின்னப் பூக்களை
உற்றுக் கவனியுங்கள்
அவற்றுள் எத்தனை அற்புதமாய்
வரையப்பட்டிருக்கின்றன
குட்டி குட்டி ஓவியங்கள்!


---கீர்த்தனா---

13 comments:

  1. உண்மைதான் ஓவியங்கள் அதிகம்தான்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் மகிழ்ச்சி தம்பி!

      Delete
  2. வலைத்தளத்தில் இன்று அறிமுகங்கண்டு வந்தேன்..

    இனியதொரு கவிதை கண்டு மகிழ்ச்சி.. வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையில் மிக மகிழ்ந்தேன். பின்னூட்டங்கள் ஒருவரை மிகவும் ஊக்கப் படுத்தும். ஆசீர்வாதத்துக்கு மிகவும் நன்றி சார்!

      Delete
  3. http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post_26.html//முடிந்தால் ஒரு பார்வை இங்கே.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. பார்த்த பின் நன்றியும் நவின்று பின்னூட்டம் இட்டு விட்டேன் தம்பி ஒவ்வொரு அறிமுகப்பதிவர்கள் தளமும் அவசியம் பார்ப்பேன்.. உங்கள் தளமும் நேரமெடுத்துப் படிக்க வேண்டும்.. அன்புக்கும் ஊக்கத்துக்கும் நெஞ்சார்ந்த நன்றி தம்பி! :)

      Delete
  4. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி சகோதரா! :)

      Delete
  5. சிறப்பான சிந்தனைகளுடன் கவிதை அருமை !வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. இனியாவின் இனிய வருகையினால் இன்புற்றேன்... மிகவும் நன்றி தோழி!

      Delete
  6. இன்றைய அவசர உலகில் ஒவ்வொரு பூவையும் உற்று கவனிக்கவும் நாம் தான் யோசனை சொல்லவேண்டியிருக்கு.. அழகான ஓவியம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தோழி எதிர்காலம் பற்றிய தேடல்களில் நிகழ்காலத்தை அனுபவிக்க மறந்து விடுகிறோம். இயற்கையை அணுஅணுவாக ரசிக்க அனைவரும் பழக வேண்டும். அது மனதுக்கு மிகவும் இதம் தரும். வருகைக்கு மிக்க நன்றி தோழி..

      Delete